50 பைசாவில் தொடங்கி தொழில்முனைவோராக ஆன பாட்ரிசியா – Patricia Narayan

நாகர்கோவில் மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த பாட்ரிசியா தாமஸ் பெற்றோர் இருவருமே அரசு வேலையில் பணிபுரிந்தனர். இவரது இளமை காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை.

இவர் சென்னையில் இருக்கும் குயின் மேரீஸ் கல்லூரியில் படிக்கும் போது நாராயண் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் இந்து என்பதால் பாட்ரிசியாவின் பெற்றோர் இவர்களை ஏற்கவில்லை. பாட்ரிசியா நாராயணை திருமணம் செய்து கொண்ட போது வெறும் 17 வயது மட்டுமே ஆனது.

திருமணம் வாழ்க்கை :

திருமணம் ஆன இவர்கள் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் சில வருடம் பின் இவர் கணவர் போதை பழக்கத்திற்கு அடிமை ஆனார். இதனால் இவரின் கனவுகள் அனைத்தும் சிதறின. குடும்பத்தை நடத்தப் பணம் இவரிடம் இல்லை. வேறு யாரு துணையும் இல்லை.

பின் அவர் ஒரு முடிவை எடுத்தார் ஒன்று மரணம், இல்லை விதியை எதிர்த்துப் போராடுவது. அப்பொழுது அவர் வயிற்றில் ஒரு குழந்தை இருந்தது ஆனாலும் இவர் கணவரை விட்டு வெளியேறினார். 2 குழந்தைகளுடன் கதியற்று நின்றார் பாட்ரிசியா.

பனீந்திர சாமா வாழ்க்கை வரலாறு

ஊறுகாய் வியாபாரம் :

இவரிடம் படிப்போ சான்றிதழ்களோ இல்லை மற்றும் இவருக்கு எந்த வேலையும் தெரியாது. யாரும் இவருக்கு வேலை தரமாட்டார்கள் என்று அறிந்து. அதையே தனக்கு சாதகமாக மாற்றிக் காட்டினார் பாட்ரிசியா.

அவருக்கு சமைக்க தெரியும் இதனால் வீட்டிலேயே ஊறுகாய்,ஜாம் தயாரித்து விற்றார் . மிகவும் சூடு பிடித்து ஓடிய வியாபாரத்தால். சமையல் கலைதான் இவர் வாழ்க்கை என்று முடிவு செய்தார்.

தள்ளுவண்டிக் கடை :

பின் 1982ஆம் ஆண்டு இவர் மெரினாவில் சிறிதாக ஒரு தள்ளுவண்டிக் கடை தொடங்கினார். அதில் காபி, போண்டா,டீ விற்பனை செய்தார்.

முதல் நாள் வியாபாரம் 50 பைசா ஆனது. ஆனாலும் மனம் தளராமல் பாட்ரிசியா தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டார். பின் ஆயிரங்களில் வருமானம் வர தொடங்கியது.

தொழில் பயணம் :

மெரினாவில் கொடிகட்டிப் பறந்த இவரின் தள்ளுவண்டிக் கடை சேரி ஒழிப்பு வாரியத்தின் தலைவர் ஒரு முறை பார்த்து அவரின் வாரியத்தின் முன் கேண்டீன் தொடங்க சொல்லி கேட்டுக்கொண்டார்.

இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொண்ட பாட்ரிசியா பின் பல இடங்களில் கேண்டீன் தொடங்கினார். இவர் தொழில் படிப்படியாக முன்னேற்றமூம் அடைந்தது. மத்திய அரசு சார்பாக 700 மாணவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் வாய்ப்பும் பாட்ரிசியாவுக்குக் கிடைத்தது. இதனால் இவர் உணவகம் பிரபலம் ஆகி பலரும் இவரை தேடி வந்தனர்.

மகளின் இறப்பு :

இவர் தொழில் சரியாகப் போய்க்கொண்டிருந்த போது, பாட்ரிசியாவின் மகள் மற்றும் கணவர் விபத்தில் உயிரிழந்தனர்.

பின் மனம் உடைந்த இவர் சிறிது காலம் தன்னை உக்கவித்து கொண்ட பின் மீண்டும் களத்தில் இறங்கினார்.

அச்சரப்பாக்கம் பகுதியில் தனது மகள் விபத்துக்கு உள்ளானபோது ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால்தான் மரணமடைந்தார் என்பதால் அந்தப் பகுதியில் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கினார் பாட்ரிசியா.

அவர் மகள் நினைவாக சந்தீபா ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் உணவகம் தொடங்கினார்.

லட்சங்களில் வருமானம் :

ஒரு பெண் தன் முயற்சியால் தொழில் தொடங்கி சாதித்து இருக்கிறார். இப்போது பாட்ரிசியா ரெஸ்டாரண்ட்டில் 200- க்கும் மேற்ப்பட்ட நபர்கள் வேலை செய்து வருகின்றனர். 50 பைசாவில் தொடங்கி இன்று 70 லட்சத்துக்கு மேல் வருமானம் வருகிறது.

பெண்ணாக இருந்தாலும், யாருடைய ஆதரவும் இல்லாமல் இருந்தாலும் விடா முயற்சியும் மன உறுதியும் இருந்தால் வெற்றிபெறலாம் என்பதற்கு பாட்ரிசியாவின் வெற்றிக் கதை ஒரு உதாரணமாகும்.

தமிழ் பெண் நினைத்தாள் அவள் அடைய வேண்டிய இடத்தை அடைவாள் என்பதற்க்கு பாட்ரிசியா தான் உதாரணம்.

Leave a Comment