மகா சிவராத்திரி தினத்தில் நடந்த அற்புத விஷேசங்கள் என்ன தெரியுமா?

மகா சிவராத்திரி மிகவும் மகத்தானது. ஆண்டு முழுவதும் வரக்கூடிய இரவுகளில் மகா சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவ பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து, வழிபட்டு வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி அற்புத பலன்களைப் பெறலாம்.

மகா சிவராத்திரி தினத்தில் நடந்த அற்புத செயல்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பார்வதி தேவி ஒரு நாள் விளையாட்டாக அழிக்கும் கடவுளான சிவ பெருமானின் கண்களை மூடினார். இதனால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின. இதனால் உயிரினங்கள் எல்லாம் திடீரென ஸ்தம்பித்து வருந்தின. அன்றைய நாள் மகாசிவராத்திரி என்று கூறுவர்.

ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதி தினத்தில் மாலையில் பிரதோஷ காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட திரியோதசி தினத்தன்று சிவபெருமான் ஆடிய பிரதோஷ நடனம் நிகழ்ந்த தினம்.

அன்றைய தினம் தான் தேவர்கள் அமிர்தத்திற்காகப் பாற்கடலை கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமானுக்கு அர்ப்பணித்தனர்.

சாமியே கதி என்று இருப்பவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? – படிக்க இங்கே கிளிக் செய்யுவும்

சிவ ராத்திரி தினத்தில் தெரிந்தோ தெரியாமலோ விரதம் இருந்தால் உங்கள் பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்.

மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் பாசக்கயிற்றை வீசியபோது, சிவபெருமானை அணைத்துக் கொண்டிருந்த மார்க்கண்டேயனைக் காக்க விரைந்து வந்து காத்தருளினார்.

அதோடு தன்னை பற்றிய பக்தனின் உயிரை பறிக்கவா பார்க்கிறார் என எமனை காலால் உதைத்தார். இதனால் மாண்ட எமனை மீண்டு உயிர்ப்பித்துத் தர வேண்டி தேவர்கள் வேண்டினர்.

இதனால் மகாசிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவ பெருமானை வழிபட்டு வந்தால் மரண பயம் நீங்கும். சகல பாவங்கள் அகலும்.

Leave a Comment