Lal Krishna Advani History in Tamil – எல். கே. அத்வானி் வாழ்க்கை வரலாறு

அத்வானியின் அரசியல் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. கட்சியை வளர்க்க வாழ்க்கை முழுவதும் போராடிய அவருக்கு, அதன் பலன் கிடைக்கவில்லை. பிரதமர் பதவிக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

பாரதிய ஜனதா கட்சியினை(பாஜக) ஆட்சிப் அமைய இவர் பெரும் காரணம். அதேசமயம் இவர் ஆர்.எஸ்.எஸ்”-இன் தீவர கொள்கையாளர்.

2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் இருந்த இவர். இந்தியத் தகவல் துறை, ஒளிபரப்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.

பாஜக வளர்ச்சிக்கு வித்திட்டு, இன்றுவரை அக்கட்சியின் மதிக்கத்தக்க தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படும் எல். கே. அத்வானியின் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் தேதி கராச்சியில்” எல். கே. அத்வானி பிறந்தார்.

அதன் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது, மும்பை நகரத்தில் இவருடைய குடும்பம் குடியேறியது.

சௌந்தரபாண்டியன் நாடார் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார்.


பின் மும்பை சட்டக்கல்லூரியில் படித்தார், பின் மும்பை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஆரம்பகாலப் பணிகள் :

கராச்சியிலுள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியா இவர். பின் இவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார்.

அங்கு ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார் மாவட்டங்களில் பணியாற்றினார். பின் தான் அவர் ஆர்.எஸ்.எஸ். இல் தீவிரமாகத் அவரை இணைத்து கொண்டார்.

அரசியல் பயணம் :

பின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இவரின் செயலை கண்டு ராஜஸ்தானில் பண்டாரியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் இதுவே இவரின் முதல் பதவி. பின் 1957 ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி சென்றார்.

பின் 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி முன்னேறினார். 1977 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த “ஜனதா கட்சி” ஆட்சியில் வந்த போது இவர் இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார், 1980ல் “பாரத ஜனதா கட்சி” அடல் பிகாரி வாஜ்பாயால் தொடங்கினார், பின் அதன் பொது செயலாளராக
நியமிக்கப்பட்டார்.

1984ஆம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து 1998இல் ஆளும் கட்சி என்ற நிலைக்கு பாரதிய ஜனதா கட்சியை உயர்த்தியதில்
அத்வானியின் பங்கு முக்கியமானது.பின் 1989-ல் நடந்த பொது தேர்தலில், அக்கட்சி 88 இடங்களில் வெற்றிபெற்று வலுவானக் கட்சியாக பெரும் வளர்ச்சி கண்டது. பிறகு 1989 ஆம் ஆண்டு அயோத்தி விவகாரத்தினை கையிலெடுத்த அத்வானி அவர்கள், ராமர் பிறந்த புண்ணிய பூமி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்தியா முழுவதும் ரதயாத்திரைத் தொடங்கி, பல மாநிலங்களில் மக்கள் செல்வாக்கைப் பெற்றார்.

பின்னர், 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் “பாரத ஜனதா கட்சி” ஆட்சி அமைத்த பொழுது, இந்திய உள்துறை அமைச்சராகத் தேர்தெடுக்கப்பட்ட எல். கே. அத்வானி அவர்கள், பிறகு இந்தியத் துணைப் பிரதமாராகவும் நியமிக்கப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு வரை நீடித்த “பாரத ஜனதா கட்சி”, மே 2004 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று, ஆட்சியைப் பிடித்தது. இதனால் வாஜ்பாய் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவே, 2004 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக பாரத ஜனதா கட்சித் தலைவராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் அத்வானி பொறுப்பேற்றார்.

2004 மற்றும் 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியடைந்தபோது, ‘குறைந்து செல் விளைவு கோட்பாடு’ என்பது அத்வானிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது என்று சொல்லலாம். தன்னால் வளர்த்து விடப்பட்ட நரேந்திர மோதிக்கு, தனக்கு கிடைக்க வேண்டிய பதவியை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை அத்வானிக்கு ஏற்பட்டது.

சர்ச்சை கருத்து :

2014 தேர்தலில் நரேந்திர மோதி போட்டியிடுவதற்கு அனைவரும் ஒப்புக்கொண்ட போது. அத்வானியின் கருத்து வெளிப்பட்டது. கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்த நான் என்று கூறினார்.

பின் , நரேந்திர மோதியின் பெயரை வெளியிட்டால் வாக்குகள் சிதறும் என்றும் அத்வானி கூறினார். ஆனால் மோதியின் தரப்பில் இருந்து வந்த அழுத்தங்களால் அத்வானி ஓரம்கட்டப்பட்டார்.

பிரதமர் வாய்ப்பு கிடைக்கவில்லை :

அத்வானியே பிரதமராக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்பியதாக வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்திலேயே பேச்சுக்கள் நிலவின.

2001ஆம் ஆண்டு இறுதிவாக்கில், ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த ராஜூ பையா, வாஜ்பேயை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை விடுக்கும் சூழ்நிலையை அத்வானி உருவாக்கினார்.

இரண்டாம் நிலை தலைவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று அத்வானி வாஜ்பேயிடம் கூறினார்.

வாஜ்பேயி பிரதமர் பதவியில் இருந்து விலகினால், அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால் அரசியலை கரைத்துக் குடித்திருந்த வாஜ்பேயி இந்த தந்திர யுக்தியை சமார்த்தியமாக கையாண்டார்.

இல்லற வாழ்க்கை :

அத்வானி 1965 ஆம் ஆண்டு கமலா அட்வானி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெயந்த் அத்வானி என்ற மகனும் பிரதிபா அத்வானி என்ற மகளும் பிறந்தார்கள்.

மனவருத்தத்திற்கு காரணம் :

வயதின் காரணமாகவோ தற்போது அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிவிட்டார் அத்வானி.

ஆனால் உண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் ஆலோசகர் என்ற நிலையும் அத்வானிக்கு இல்லை என்பதுதான் உண்மை. அதுதான் அத்வானியின் மனவருத்தத்திற்கு காரணம். இவரை யாரும் அந்த கட்சியில் மதிக்கவில்லை என்பதே உண்மை.

Leave a Comment