Tamil Quotes

Mata Amritanandamayi History in Tamil – அமிர்தானந்தமயி வாழ்க்கை வரலாறு

மாதா அமிர்தானந்தமயி மடம், உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் என பல துறைகளில் சமூகசேவை செய்யும் ஆன்மீகவாதியாகவும், சமூக சேவையாளராகவும் வாழ்ந்து வரும் அம்ருதானந்தமயி தேவி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் கொல்லம் மாவட்டத்தில் சுகுனாதனந்தனுக்கும்,தமயந்தியம்மையாருக்கும் மூன்றாவது மகளாக ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தார்.

சத்திய சாய் பாபா வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

குடும்ப சூழ்நிலை காரணமாகவும் இவர் தன்னுடைய சகோதரிகளை கவனித்து கொள்ள பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்ட அம்ருதானந்தமயி தேவி இளம் வயதிலேயே ஒரு கடவுள் பக்தி கொண்டவராக இருந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் வளர்ந்தார்.

ஆன்மிகம் மற்றும் சமூக சேவையாளராக அம்ருதானந்தமயின் பயணம் :

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்த இவர் இளம் வயதிலேயே அனைவருக்கும் தாயைப்போல ஆறுதல் கூறுவார். இவர் திருமணம் செய்யாமல் ஆன்மீகத்தில் முழுமையாக தன்னை அர்பணித்துக்கொண்டார்.

முதன்முதலில் 1979 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற்கு அருகில் கொல்லம் என்ற இடத்தில் மாதா அம்ருதானந்தமயி மடம் தொடங்கினார். ஒரு தாயை போல ஆறுதல் கூரி தரிசனம் தருவதால் அரவணைக்கும் அன்னை என அழைக்கப்படுகிறார்.

இதனால் மக்கள் அவரிடம் வந்து அவர்களுடைய குறைகளையும், பிரச்சனைகளையும் கூறி மனநிம்மதி அடைகின்றனர். இவர் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடக்கூடியவர்.

1981 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இவர் உலகமுழுவதும் பல இடங்களில் ஆன்மீக உரையாற்றியுள்ளார். இவர் அறக்கட்டளை மூலம் பரவலாக உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம், ஆன்மிகம் என அனைத்தையும் ஏழை, எளிய மக்களுக்கு சேவை புரிந்து வருகிறார்.

அமிர்தா விஸ்வா வித்யாபீடம், அமிர்தா கணினி தொழில்நுட்ப நிறுவனம், எம்.எ.எம் தொழிற்துறை பயிற்சிமையம், அமிர்தா சமஸ்கிருத மேல்நிலைப் பள்ளி, அமிர்தா வித்யாலயம், அமிர்தா வித்யபீடம் மற்றும் வேதாந்த வித்யாபீடம் போன்ற பல அறக்கட்டளையின் கீழ் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

மருத்துவம் மற்ற பிரிவுகளும் :

அமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அம்ரிதக்ரிப அறக்கட்டளை மருத்துவமனை, அம்ரிதாபுரி, அம்ருதா ஆயுர்வேத மருத்துவ கழகம், அம்ருதா ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம், என சொல்லி கொண்டே போகலாம்.

அமிர்தா கண் மருத்துவமனைகள், அமிர்தா குட்டீரம் ஏழை மற்றும் ஊனமுற்றவர்களுக்கான வீட்டு வசதி திட்டம். அமிர்தா நிதி விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம். அமிர்தா நிகேதனம் – அனாதை இல்லை. என பல திட்டங்களும் செய்து உள்ளார்.

விருதுகள் :

1993 ஆம் ஆண்டு இந்து மத மறுமலர்ச்சி விருது.

1998 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு மற்றும் ஷேர் சர்வதேச மனிதாபிமான
விருது சிகாகோவிலிருந்து வழங்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு கர்மா யோகி விருது வழங்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு மகாவீர் மகாத்மா விருது வழங்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு சென்ட்டேன்னரி லெஜெண்டரி அவார்ட்ஸ் ஆஃப் த இன்டர்நேஷனல் ரோடரியன்ஸ்

2006 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பார்க்ஸ் மோர்டன் இடைச்சமயம் விருது.

2010 ஆம் ஆண்டு நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம், இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

12 கோயில்கள், 33 க்கும் மேற்பட்ட கல்விநிருவனங்கள் என பல உதவிகளையும் வழங்கி வருகிறார்.

Exit mobile version