Tamil Quotes

Gemini Ganesan History in Tamil – ஜெமினி கணேசன் வாழ்க்கை வரலாறு

காதல் என்றால் உடனே நினைவுக்கு வரும் அளவுக்கு, நடிப்போடு காதலிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர், சிவாஜி இருக்கும் போதே தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தார்.

இவர் தமிழ் மொழியில் மட்டும் நடிக்காமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பல மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் 200 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். காதல் மன்னன் என்று அன்புடன் அழைக்கப்படும் இவர்.

இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது பெற்றுள்ளார். தமிழ் திரையுலக ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த ஜெமினி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1922 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமசாமி என்பவருக்கும் கங்கம்மாவிற்க்கும் மகனாக பிறந்தார் ஜெமினி கணேசன்.

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

சிறுவயதில் தாத்தா நாராயண சாமி ஐயர் வீட்டில் வளர்ந்த ஜெமினி பின் புதுக்கோட்டையிலுள்ள குலமது பாலையா என்னும் ஆங்கில பள்ளியில் படித்தார். பின் சென்னையில் உள்ள ராஜா முத்தையா செட்டியார் உயர் நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார்.

பின் சென்னை தாம்பரம்கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இவரை ஜெமினி ஸ்டுடியோவின் கேமராமேன் ராம்நாத் சந்தித்த பின்னர் தான் இவரின் வாழ்க்கையே மாறியது.

திரைத்துறையில் ஜெமினி கணேசனின் பயணம் :

1947ல் கல்லூரி வேலையை விட்டு விட்டு சினிமா ஆசையில் ஜெமினி ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாக சேர்ந்தார் கணேசன்.அதுமுதல் ஜெமினி கணேசன் ஆனார். 3 ஆண்டுகள் அங்கு வேலை பார்த்த ஜெமினி, மிஸ் மாலினி படத்தின் மூலம் நடிப்புக்கு வந்தார்.

ஆனால் அந்தப் படம் சரியாகஓடவில்லை. ஆனாலும் ஜெமினி நிறுவனம் தயாரித்த படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் அவர் தொடர்ந்து நடித்து கொண்டே இருந்தார். 1952 ஆம் ஆண்டு கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த ‘தாய் உள்ளம்’ என்ற படத்தில் வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார்.

இத்திரைப்படம், தோல்வி அடைந்தது ஆனால் விருது பெறத்தக்க சிறந்த படமாகப் இருந்தது. பின் வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் கதாநாயகனாக மாறி, ‘காதல் மன்னன்’ எனப் பெயர்பெற்றார்.

இல்லற வாழ்க்கை :

ஜெமினிக்கு நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோர் தவிர பாப்ஜி என்ற மனைவியும் உண்டு. பாப்ஜியைத்தான் ஜெமினி முதன்முதலில் திருமணம் செய்தார்.


பாப்ஜியை மணக்கையில் ஜெமினிக்கு வயது 19. தனது 22வது வயதில் ஒருகுழந்தைக்கு தந்தையானார். பின்னர், இந்தி நடிகையான புஷ்பவள்ளியை திருமணம் செய்துகொண்டார்.


இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். அதன் பிறகு, 1953 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு விஜயசாமூண்டிசுவரி என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் பிறந்தனர்.

ஜெமினி கணேசனின் வெற்றிப் பயணம் :

தொடக்கத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே வில்லனாக நடித்த இவர் அடுத்த ஆண்டே ‘பெண்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

இந்த படம் தோல்வியை தந்தது, அதே ஆண்டில் வெளியிடப்பட்ட மனம்போல மாங்கல்யம் என்ற படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்தார்.

இந்த திரைப்படம் ஜெமினி கணேசனின் வாழ்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது. பின் இத்திரைபடத்தில் நடித்த சாவித்திரியை திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம் என அனைத்து விதமான படங்களிலும் நடிப்பை வெளிபடுத்திய ஜெமினிதமிழ் திரைப்படத்துறையில் ‘காதல் மன்னன்’ என அனைவராலும் போற்றப்பட்டார்.

எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் சாதாரணமாக நடிக்கும் இவர். பல படங்களில் பலதரப்பட்ட அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அவர் ஒரு முன்னணி கதாநாயகனாக இருக்கும் போது , சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், முத்துராமன், ஏவி.எம். ராஜன் போன்ற பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஜெமினிகணேசன் 1970 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த ‘லலிதா’ என்ற திரைப்படமே அவர் கதாநாயகனாக நடித்த கடைசி படமாக இருந்தது.

பின் இறுதிக்காலம் வரை கமல்ஹாசன், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் இணைந்து சிறு கதபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

இறப்பு :

இறுதி காலத்தில் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் தன்னுடைய 84 வது வயதில் காலமானார்.

விருதுகள் :

1970 ஆம் ஆண்டு காவியத் தலைவி திரைப்படத்திற்க்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.

1971 ஆம் ஆண்டு மத்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது.

1974 ஆம் ஆண்டு நான் அவனில்லை திரைப்படத்திற்க்காக ஃபிலிம்பேர் விருது.

1993 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான சவுத் ஃபிலிம்பேர் விருது.

கலைமாமணி விருது.

Exit mobile version