நான்கு மனைவிகள் – நீதிக்கதைகள்

neethi kathaigal in tamil

ஒருவன் நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். இருந்த போதும், அவனுக்கு நான்காவது மனைவி மீதுதான் அதிக பாசம். மற்ற மூன்று மனைவிகளை விட, அவள் மீது கொஞ்சம் அதிக அக்கறை காட்டுவான். நன்றாக பார்த்துக்கொள்வான். அவனுடைய மூன்றாவது மனைவியையும் அவனுக்கு பிடிக்கும். ஆனால் அவளை யாருக்கும் காட்ட மாட்டான். வேறு யாருடனாவது ஓடிவிடுவாளோ என்று பயம் அவனுக்கு. தன் நண்பர்களுக்கு கூட அவளை காட்ட மாட்டான். இரண்டாவது மனைவியிடம் அவனுக்கு ஏதாவது … Read more

ஆசிரியர் சிந்தனை கதை

neethi kathaigal in tamil

மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே சிகெரெட் பிடிக்க தொடங்கி விட்டான். 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் மது அருந்தவும் கற்று கொண்டான். இருப்பினும் தட்டு தடுமாறி பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் போய் சேர்ந்தான். சொல்லவா வேண்டும் பள்ளியில் மது அருந்த கற்று கொண்டவன் ஒரு படி மேல் சென்று மற்ற போதை பொருட்கள் அனைத்திற்கும் அடிமையானான். போதா குறைக்கு பெண்கள் சகவாசமும் அதிகமானது. இப்படியே சென்று கொண்டிருந்ததால் அதிக பணம் … Read more

பிச்சைக்காரன் – தன்னம்பிக்கை கதை

Motivational Stories in Tamil

பிச்சைக்காரன் ஒருவன் புகைவண்டி நிலையத்தின் வாசலில் பை நிறைய பென்சில்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த பணக்காரர் ஒருவர் 10 ரூபாய் நோட்டை எடுத்து அந்த பிச்சைக்காரனின் தட்டில் போட்டார். சிறுது தூரம் நடந்து சென்று தீடீரென மீண்டும் அந்த பிச்சைக்காரனை நோக்கி நடந்து வந்தார். நீதான் பை நிறைய பென்சில்கள் வைத்து கொண்டிருக்கிறாயே, நான் ஏன் உனக்கு சும்மா பணம் கொடுக்க வேண்டும், அதனால் 10-ரூபாய்க்கு சமமான பென்சில்களை எனக்கு கொடு … Read more

உன் பக்கத்தில் இருப்பது யார்? அதுவே உன் வெற்றியை தீர்மானிக்கும்..! தன்னம்பிக்கை பற்றிய சிறுகதை

tamil motivation stories

ஒரு நாள் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காரில் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்துக்கு இருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார். தீடீரென கரை நிறுத்திய ஓட்டுநர், தூங்கிக்கொண்டிருந்த என் நண்பரை எழுப்பி கொஞ்சம் பின்னல் சென்று அமருங்கள், நீங்கள் தூங்கி வழிவதை பார்த்தால் எனக்கும் தூக்கம் வருகிறது என்றவுடன் நண்பர் முனகிக்கொண்டு பின் இருக்கையில் வந்து அமர்ந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தார். நான் தூக்கம் வராமல் ஓட்டுநர் … Read more

பென்சிலின் வாழ்க்கை – தன்னம்பிக்கை பற்றிய சிறுகதை

tamil quotes

கடையில் இருந்து வாங்கிவரப்பட்ட பென்சில் சில நிமிடம் கைகளில் கொஞ்சி விளையாடும். அலங்கரிக்கப்படும், பாதுகாக்கப்படும் ,அடுத்தவரிடம் காட்டி பொறாமை கொள்ள செய்யும். அடுத்த நிமிடமே தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும்.பக்கங்கள் சீவப்பட்டு எதிர்கால பயன்பாட்டிற்காக தயார் செய்யப்படும்.பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வலித்தாலும் சுகமாக இருந்தாலும் மறுப்பு சொல்லாமல் கடக்க வேண்டிய காலம் அது. வலியுடன் வெளிவரும் எழுத்தாணி, சில தேவையில்லாத கிறுக்கல்களை சந்திக்கும்.  நான் பயனுள்ள எழுத்தாணி என்னை ஏன் இப்படி தேவையில்லாத கிறுக்கல்களுக்கு ஆளாக்குகிறீர்கள் என்னை வைத்து … Read more